Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

34 கிலோ போதை மாத்திரையுடன் ஒருவர் கைது


60,460 சட்டவிரோத போதை மாத்திரைகளை (34 கிலோ) இறக்குமதி செய்த சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

அவரது பயணப்பொதிகளை பரிசோதித்த போது, ​​ மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் மாற்று மருந்தாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 40 வயதான திகன, ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.


No comments