Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு


மக்களின் ஜனநாயக , அடிப்படை உரிமைகள் மீறப்படுவதனால்,  அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

மக்களுக்கு பயந்த, மக்கள் அபிப்பிராயத்தை ஊசலாட்டும் திறமையற்ற தற்போதைய அரசாங்கம் 24 மணிநேரமும் 365 நாட்களுமாக தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

 தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தினால் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தும் தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி மக்களை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதனூடாக, ஊடகங்களை அடக்கி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக முன் நிற்கும் போது அவர்களை பயங்கரவாதிகள் என அழைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. 

இவ்வாறு மக்களின் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மீறப்படுவதால், இன, மத, சாதி பேதமின்றி சிவில் அமைப்புக்களும், பிரஜைகளும் இதற்கு எதிராக ஒன்றாகப் போராட முன் வர வேண்டும் என தெரிவித்தார். 


No comments