தற்போது நிலவும் கடுமையான வெப்பத்தை தவிர்க்கும் முகமாக கூரை சீற் க்கு தண்ணீர் விசிற வைத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மண்டபம் ஒன்றில் தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 34 பாகை செல்சியசில் வெப்ப நிலை காணப்படுவதனால் , கடுமையான வெக்கையான காலநிலை காணப்படுகிறது.
அத்துடன் காற்று வீசும் அளவும் குறைவடைந்துள்ளது. அதனால் கட்டடங்களில் இருக்க முடியாத நிலைமை காணப்படுகின்றன.
இந்நிலையில் மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சை மண்டபத்தினை குளிர்விக்கும் முகமாக கூரை சீற்றில் தூவல் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை கொண்டு கூரைக்கு தண்ணீர் ஊற்ற கூடியவாறு செய்துள்ளனர்.
No comments