வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பில் அவரது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, கமகொட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, கமகொட பிரதேசத்தைச் சேர்ந்த நீலமுனி ரமணி சில்வா, என்பவர், தனது வீட்டில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடல்கூற்று பரிசோதனையில், மூச்சுத்திணறல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments