Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாகபூசணி அம்மனை அகற்ற கோரியவர் யாழில் இருந்து வெளியேறுவார்


நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றக்கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியவர் விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து வௌியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தொிவித்தள்ளார். 

 மேலும் தெரிவிக்கையில், 

பண்ணையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்பாடு வழங்கியதாக அறிகிறேன். 

அவரது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றது பிரச்சினை இல்லை மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்று என்பதை பொலிசாரிடம் கேட்க விரும்புகிறேன். 

சட்டம் யாவருக்கும் சமன் சட்டத்தை உரிய முறையில் பொலிசார் நடைமுறைப்படுத்த வேண்டும். முறைப்பாடு வழங்கியவர் யார் என்பது இதுவரை வெளி வராத நிலையில் யாழ்ப்பாணத்தை விட்டு விரைவில் வெளியேறுவார் போல தெரிகிறது என மேலும் தெரிவித்தார்.

No comments