Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கிளிநொச்சியில் இடியானால் கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவன்


கணவன் மனைவிக்கு இடையிலான கருத்து முரண்பாடு முற்றிய நிலையில் , கணவன், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கட்டுத்துவக்கினால் சுட்டதில் மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அக்கராயன் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை கணவன் மனைவிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் ஆத்திரமுற்ற கணவன் வீட்டில் இருந்த சட்டவிரோத துப்பாக்கியினால் மனைவியை சுட்டுள்ளார். 

அதனை அடுத்து அவ்விடத்தில் இருந்து கணவன் தப்பி சென்ற நிலையில் , அயலவர்கள் மனைவியை மீட்டு , கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அக்கராயன் பொலிஸார் , சட்டவிரோத துப்பாக்கியை மீட்டதுடன் , துப்பாக்கி சூடு நடாத்திய கணவனையும் கைது செய்துள்ளனர். 

No comments