யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் முகமாக விகாரைக்கு முன்பாக போராட்டம் நடாத்தி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்குள் , ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தியும் , வீதி தடைகளை போட்டும் தடையேற்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும், வெளியேறுவதற்கு தாம் தடையில்லை எனவும் , ஆனால் அவர்களை சந்திக்கவோ அவ்விடத்திற்கு செல்லவோ தாம் யாரையம் அனுமதிக்க மாட்டோம் என பொலிஸார் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி எவரையும் உள்செல்ல அனுமதிக்க வில்லை.
மனிதவுரிமை ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 1. 30 மணியளவிலையே முற்றுகைக்குள் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு உணவு , நீர் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று வழங்க பொலிஸார் அனுமதித்தனர்.
இந்நிலையில் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments