பாணந்துறை, வலான சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 10 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற வெசாக் தோரணத்தை பார்வையிட சென்றவர்கள், வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியுள்ளதாகவும் , விபத்தில் சிக்கியவர்கள் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments