Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

களுத்துறையில் தனியார் விடுதிக்கு பின்புறமாக இருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு


களுத்துறை நகரில் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவி சடலமாக மீட்கப்பட்ட சமயம் அவரது உடலில் துணிகள் அற்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த மாணவி நேற்று மதியம் மற்றுமொரு இளம் ஜோடி மற்றும் இளைஞர் ஒருவருடன் தற்காலிக விடுதிக்கு வந்து மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

மாணவியுடன் வந்த மற்றைய ஜோடி, சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு சற்று முன்னர் விடுதியை விட்டு வெளியேறியதுடன், அவருடன் வந்த இளைஞனும் விடுதி அறையை விட்டு வௌியேறியிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன், நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

No comments