தடைகளை மீறியும் கொழும்பு பொரளை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
கொழும்பு பொரளை பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்நிலையில், குறித்த இடத்துக்கு வந்த மற்றுமொரு தரப்பினர் அந்த நிகழ்வை நடத்த வேண்டாம் என்று கூறி குழப்பத்தில் ஈடுபட்டமையால், பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மனித சங்கலி பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டு அதனுள் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டது
வண.பிதா மா.சக்திவேல், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிலிங்கம், சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டத் தரப்பினர் பங்கேற்று நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இதன்போது ஊடகவியலாளர்கள், பொலிஸார், அருட்தந்தையர், சட்டத்தரணிகள் உள்ளிட்டத் தரப்பினர் மீது குழப்பம் விளைவித்த தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments