மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனமும், மதவாச்சி வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவி அவர்களது பிள்ளைகளான 9 வயது, 6 வயது, 4 வயதுடைய மூன்று சிறுவர்கள் ஆகிய ஐவர் நாளையதினம் புதன்கிழமை இடம் பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றிற்காக முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் வருகை தந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments