ஈராக், ருமேனியா மற்றும் Cyprus ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கை தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நாடுகளில் அதிகளவான இலங்கையர்கள் இருப்பதனால், அவர்களைக் கவனித்துக் கொள்ள தூதரகங்கள் அமைப்பது முக்கியம்.
Cyprus மற்றும் ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கு முன்னதாக செயற்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளிலும் இலங்கை தூதரகங்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து முன்னதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன்.
இந்த நிலையில் குறித்த தூதரங்களை அமைப்பது தொடர்பில் பேச்சு வார்தைகள் நடத்தப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார்
No comments