மலையக மக்களின் உரிமைகளை வழங்க கோரி இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நினைவு கூர்ந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
No comments