Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்கும் பிணை


தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, இருவரையும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த 03 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு தளையடி பொது விளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 05 ஆம் திகதி அதிகாலை மருதங்கேணி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதயசிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இருவரும் நீதிமன்றம் முன்னிலைப் படுத்தப்பட்டனர். அதனை அடுத்து, நீதவான் இருவரையும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. 

No comments