மொரட்டுமுல்ல சமரகோன் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளன கணவன் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவன் - மனைவிக்கு இடையில் நீண்டகாலமாக குடும்ப தகராறு இடம்பெற்று வந்தததாகவும் அந்நிலையில் , அந்நிலையில் நேற்றைய தினம் கணவன் தூங்கிக்கொண்டிருந்த வேளை கணவனுக்கு தீ வைத்துள்ளார்.
தீ உடலில் பரவியதும் தூக்கத்தில் இருந்து எழுந்த கணவன் அபயக்குரல் எழுப்பவே அயலவர்கள் கூடி தீயினை அனைத்து கணவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மனைவியை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
No comments