Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ரஷ்யாவில் இருந்து பின்வாங்கிய பிரிகோஷின் குழு


ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைக் கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்த வாக்னர்குழு, திடீரென தனது முடிவை மாற்றி பின்வாங்கியுள்ளமையினால் 24 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

புட்டினுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட வாக்னர் குழுவிற்கும் ரஷ்ய இராணுவத்துக்கும் இடையேயான மோதல் போக்கை அடுத்து எவரும் எதிர்பாராத நிலையில் அக்குழு ரஷியாவுக்கு எதிராகத் திரும்பி, ரஷ்யாவின் தென் பகுதியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது.

இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசவிரோதிகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என விளாடிமிர் புட்டின் நேரடியாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும் புடினின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத பிரிகோஷின், தலைநகர் மொஸ்கோவையும் கைப்பற்றப் போவதாக அறிவித்து தனது இராணுவ அணிவகுப்பையும் நடத்தினார்.

இதையடுத்து ரஷ்யாவின் நட்பு நாடான பெலரசின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகாஷென்ஸ்கோ வாக்னர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சமரச முயற்சியின்படி, பிரிகோஷின் பெலரசுக்கு செல்ல இருப்பதாகவும், ஆயுதப்புரட்சி முடிவுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேநேரம் பிரிகோஷின் மற்றும் அவரது படையினர் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு கைவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments