வவுனியா தவசிக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
tamilnews1செய்தி குழுமத்துடன் இணைந்து கொள்ள
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
கணவன் , மனைவி மற்றும் அவர்களின் இரு பிள்ளைகள் என நால்வரே மன்னாரில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் அரிச்சல்முனை கடற்கரையை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை இவர்கள் நால்வருடன் 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments