" நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்" என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டில் , தனது உறவினர் ஒருவரிடம் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் 2 இலட்ச ரூபாய் பணத்தினை கடனாக பெற்ற பின்னர் , அதனை மீள கையளிக்காது காலம் கடத்தி வந்தார்.
அதனால் உறவினரின் பணத்தினை மீள பெற்றுக்கொடுக்க உறவினர்களை அழைத்து சென்று பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தேன்.
tamilnews1 செய்தி குழுமத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.
Follow us via Whats App https://chat.whatsapp.com/ H2g8RmUpm8xDqiZJH11jfN
எமது முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பணத்தினை பெற்றவரை விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.
அந்நிலையில் பணம் பெற்ற நபர் என்னை தொலைபேசி ஊடாக அழைத்து , " நான் சரத் வீரசேகராவில் ஆள், உன்னை தூக்குவேன் " என மிரட்டினார் என இளைஞன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments