Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 18

Pages

Breaking News

ஐக்கிய தேசியக் கட்சியை பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்


எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் அதிகாரத்தை ஒப்படைக்கும் அளவுக்கு, மக்கள் ஆணை இன்னமும் கிடைக்கவில்லை.

மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் நிச்சயமாக வெற்றியடையச் செய்வார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி வெற்றிபெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும்.

அவர்களை மொட்டுக் கட்சியினர்கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.