Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கத்தியுடன் கைதான யாழ்.பல்கலை மாணவனை உளவள சிகிச்சை பெறுமாறு நீதிமன்று உத்தரவு!


கத்தியுடன் கைதான யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனை யாழ்.போதனா வைத்தியசாலையில் உளவள சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

வர்த்தக நிலையத்திற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி , அடாவடியில் ஈடுபட்டார் என குறித்த மாணவன் நேற்று முன்தினம்  திங்கட்கிழமை இரவு , கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட மாணவனை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்திய வேளை , மாணவன் போதைக்கு அடிமையானவர் என வைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து மருத்துவ அறிக்கையுடன் மாணவனை யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை , வழக்கினை விசாரித்த நீதவான் , மாணவனை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் உளவள சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என உத்தரவிட்டார். 

No comments