அதிஷ்ட இலாப சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற நபரை கடத்தி சென்று 10 நாட்களாக தடுத்து வைத்து தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
கண்டி அக்குறணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு மூலம் ஏழரை கோடி ரூபாயை வென்று இருந்தார்.
இந்நிலையில் அந்நபரை கடத்தி சென்ற கும்பல் ஒன்று கம்பளை பகுதியில் 10 நாட்களாக இரண்டு வீடுகளில் மாறி மாறி தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் இரண்டு வீடுகளையும் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது , ஒரு வீட்டில் இருந்து கடத்தப்பட்ட நபரை மீட்டுள்ளனர்.
அத்துடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு போரையும் கைது செய்து கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments