Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பேரூந்திற்கு வெளியே தலையை நீட்டிய மாணவன் உயிரிழப்பு!


கல்வி சுற்றுலாவிற்காக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியதால் விபத்து ஏற்பட்டு மாணவன் உயிரிழந்துள்ளான். 

குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல மலையை நோக்கி செல்லும் குறுக்கு வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வௌியே தலையை நீட்டிய போது மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments