Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் இருந்து 35 பயணிகளுடன் சென்ற பேருந்து நீர்கொழும்பில் தீக்கிரை!


யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. 

குறித்த பேருந்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்ட நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டது.

 உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டது, வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றனர்.

 நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போது, பேருந்து, முற்றாக எரிந்து உள்ளது. 

 கொச்சிக்கடை பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments