Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு


சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிவித்துள்ளதுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 1,747 குடும்பங்களைச் சேர்ந்த 6,333 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,208 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நாடு முழுவதும் 301 வீடுகளும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிவித்துள்ளதுள்ளது.

No comments