Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வான் ஒன்றில் வந்த கும்பலால் யாழில் ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்!


யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , வான் ஒன்றில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக, இன்றைய தினம் சனிக்கிழமை  உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

கிளிநொச்சியில் இருந்து வான் ஒன்றில் யாழ்ப்பாணம் வந்த 12 பேர் அடங்கிய கும்பலே வியாபாரியை கடத்தி சென்றதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். 

கடத்தப்பட்ட நபர் , நபர் ஒருவரிடம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் , அதனை மீள செலுத்தாத நிலையில் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சனை நிலவி வந்த நிலையில், குறித்த நபர் கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அந்நிலையில் பொலிசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments