Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தியாக தீபத்தை அருவுருவமாக வணங்கிய திருகோணமலை மக்கள்


திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் நீதிமன்று ஊடாக தடை பெற்ற நிலையில் தியாக தீபத்தின் உருவப்படம் இன்றி குதிரைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் 

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் , நினைவேந்தலுக்கு தடை கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அடுத்து , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்று நினைவேந்தலுக்கு தடை விதித்து கட்டளை பிறப்பித்தது. 

அந்நிலையில் குளக்கோட்டன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது , தியாக தீபத்தின் உருவப்படம் இன்றி , கதிரையில் தியாக தீபம் அமர்ந்து இருப்பதாக ஆத்மார்த்த ரீதியாக நினைத்து கதிரைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நிகழ்வில் பொலிஸார் தடை கட்டளையுடன் நின்றிருந்த போதும் , அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 




No comments