Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆபாச படங்களை பகிர்வோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள்


நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்காக புதிய சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற குற்றத்திற்காக பிடிபடும் நபருக்கு முதல் தடவை ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதத் தொகை இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments