Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூரில் யாசகம் பெற வந்த குழந்தையை காணவில்லை


நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து , நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகம் இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர். 

அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது. 

தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது 

No comments