Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறையில் வீடுடைத்து கொள்ளை


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஐயனார் கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வீட்டில் இருந்தோர் , மதிய நேரம் அயலில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.  நிகழ்வு முடிந்து தமது வீடு திரும்பியோர் , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதனை அவதானித்து , வீட்டினுள் சென்று பார்த்த போது , வீட்டில் இருந்த, சங்கிலி , காப்பு உள்ளிட்ட  10 பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதனை அவதானித்துள்ளனர். 

அதனை அடுத்து , பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments