Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்


யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , ஆலை இயந்திரங்கள் ,தளபாடங்கள் உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 

அளவெட்டி வடக்கில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

அரிசி ஆலை தீ பிடித்ததும் , உரிமையாளர் அயலவர்கள் உதவியுடன் , தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும் , தீ வேகமாக பரவியதால் இயந்திரங்கள் , தளபாடங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன. 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 





No comments