Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். கழிப்பறைக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட உடுவில் பகுதியை சேர்ந்த, 34 வயதுடைய  இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காலையில் கழிப்பறைக்கு சென்ற மகன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் , சந்தேகம் அடைந்து தாயார் மகனை அழைத்து, கழிப்பறை கதவை தட்டிய போதும் , மகனின் சத்தத்தை காணாததால் , கதவை உடைத்த போது , மகன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை வலிகாமம் கிழக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்க பணித்தார் 

கழிவறைக்கு அருகில் போதை பொருள் பாவனைக்கு பயன்படுத்தும் ஊசி , தேசிக்காய் என்பவை காணப்படுவதால் , இளைஞன் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்தமையால் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

No comments