Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். விபத்து - இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கீரிமலை பகுதியை சேர்ந்த ஜோசப் சுதர்சன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கல்லுண்டாய் பகுதியில் கடந்த வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

அதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் காரின் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments