Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

06 மாத குழந்தையை அடித்து கொலை செய்த குற்றத்தில் தாய் கைது


ஆறுமாத கைக்குழந்தையை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில், 21 வயதான தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 30ஆம் திகதி தாயார் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது வளர்ப்பு நாய் தாயின் காலை பிடித்து இழுத்ததில் குழந்தையின் தலை சுவரில் மோதியதாக கூறப்பட்டு , வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

மருத்துவ சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததையடுத்து, சந்தேக மரணம் எனக் கருதி ஊறுபொக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது தாயினால் கைக்குழந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தாயை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments