Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். புகையிரதத்தில் ஏற முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

உடனடியாக, மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

No comments