Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். மாடுகளை கடத்தி சென்ற குற்றத்தில் ஒருவர் கைது




சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்தி செல்லப்பட்ட நான்கு மாடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகர் பகுதியை நோக்கி பட்டா ரக வாகனத்தில் மாடுகளை கடத்தி சென்ற வேளை மண்டைதீவு சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில், பொலிஸார் வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே மாடுகளை கடத்தி செல்லப்படுவதனை கண்டறிந்துள்ளனர். 

அதனை அடுத்து மாடுகளை கடத்திய குற்றத்தில் வாகன சாரதியை கைது செய்த பொலிஸார் வாகனத்தையும் , மாடுகளையும் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments