Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு - யாழில் உள்ள மூன்று நீதிமன்றங்களால் நிராகரிப்பு


மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றிலும் , வல்வெட்டித்துறை , பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றிலும் , ஊர்காவற்துறை பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற  விசாரணைகளை அடுத்து , அந்த அந்த நீதிமன்றங்களினால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை சுன்னாகம் , அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments