Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அபுதாபியில் கட்டடத்தில் இருந்து விழுந்த யாழ்.வாசி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தெல்லிப்பளை, புளியடியை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். 

தொழில் நிமித்தம் அபுதாபியில் வசித்து வந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மூன்று மாடி உயர கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த நிலையில் அபுதாபியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , தூதரகத்தின் உதவியுடன் வீட்டார் அவரை கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

No comments