Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நெடுந்தீவில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்


யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 13 தமிழக கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 13 தமிழக மீனவர்களை கைது செய்த கடற்படையினர் , அவர்களின் 3 படகுகளையும் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக நீதிமன்றில் முற்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  

No comments