Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, June 4

Pages

Breaking News

கிளிநொச்சியில் பிரபல உணவகத்திற்கு சீல்


கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது. 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தவே பார்வையிட்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் உணவகத்தை தற்காலிகமாக மூட பணித்தார். இதனையடுத்து உணவகம் பொதுச் சுகாதார பரிசோதகரால் சீல் வைத்து மூடப்பட்டது.