Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குழந்தைகளுக்கு அம்மை நோய்த் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்!


 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

 சுகாதார மேம்பாட்டு பணியகம், குழந்தைகள் மத்தியில் அம்மை நோய் அதிகளவில் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த நிலையில், எதிர்வரும் 6 திகதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, 6 முதல் 9 மாதங்களுக்கு இடையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துக் கொள்ளுமாறு பெற்றோருக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவவுறுத்தியுள்ளது.

No comments