சட்டவிரோதமான முறையில் வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் குழுவினர் இன்று (11) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் 22,800 "மென்செஸ்டர்" வகையைச் சேர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 114 சிகரெட் அட்டைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் , சந்தேக நபரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments