யாழ்ப்பாணம் - வல்லிபுரம் காட்டு பகுதியில் இருந்து 84 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடி படையினர் , காட்டு பகுதிக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சா போதை பொருளை மீட்டனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை 48 கிலோ அபின் போதைப்பொருளும், 28 கிலோ கேரள கஞ்சாவும் வல்லிபுரம் கடற்கரையில் இருந்து மீட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments