Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பெண்ணுடன் இரகசிய தொடர்பில் இருந்தவர் மீது துப்பாக்கி சூடு


பெண்ணொருவருடன் இரகசிய தொடர்பில் இருந்தவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் , அந்நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

காயமடைந்தவர் பாவட்டாமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், அவருக்கு பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருந்ததாகவும், விசாரணையில் அந்த பெண்ணுடன் தொடர்புடைய மற்றொரு நபர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தற்போது அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments