Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறையில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களும் , மறுநாள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். 

அந்நிலையில் , குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , தம் மீதான மூன்று குற்றச்சாட்டுக்களையும் தமிழக கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதவான் , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்தார். 

No comments