Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

3 பிள்ளைகளையும் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு யாத்திரை சென்ற பெற்றோர் கைது


குளியாப்பிட்டி – தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் வீட்டில் வைத்து பூட்டிவைத்துவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும் 3 வயதுடையவர்கள். பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டின் கதவை உடைத்து பிள்ளைகளை மீட்டதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளுக்கும் பிஸ்கட், பாண் போன்றவற்றை உணவாக வைத்துவிட்டு, பெற்றோர்கள் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (24) வீடு திரும்பிய பெற்றோரை குளியாப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

No comments