கிளிநொச்சியில் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் முதியவரிடம் 3 இலட்சத்து 50ஆயிரம் மற்றும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்களை இரண்டு கட்டங்களாக பெற்று அவருக்கு காசோலைகளை வழங்கியுள்ளனர்.
அவர்களால் வழங்கப்பட்ட காசோலையை குறித்த திகதியில் முதியவர் வங்கியில் வைப்பிலிட்ட போது , காசோலை கணக்கு இலக்கத்தில் பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பியுள்ளது.
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதியவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , கிளிநொச்சியில் இயங்கும் தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகஸ்தரையும் , அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.
No comments