வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில்,யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
இரண்டு நாள் பயிற்சி பட்டறையில் முடிவில் , யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமாரினால் நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments