Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் எஸ்.சி.முத்துகுமாரன


நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்படவுள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமைக்கான காரணத்தை உத்திக பிரேமரத்ன இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

உத்திக பிரேமரத்னவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கவுள்ளார்.

இதையடுத்து, புதியநாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments