Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

படிக்க மின்சாரம் தேவையில்லை - விளக்கேற்றிப் படிக்கலாம்


எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்த்தார். 

செலுத்தப்படாத மின் கட்டணங்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து அவரிடம் கேட்ட போது, 

நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை ஏற்றுக்கொள்கிறேன். அண்மைய கட்டண அதிகரிப்புக்கு, ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக கட்டணங்கள் தேக்கநிலையில் இருந்தமையே காரணம். மின் துண்டிப்பினால் மாணவர்கள் படிக்க முடியாதுள்ளது என்பதனை ஏற்க முடியாது.  எண்ணெய் விளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகளும் படிப்பதற்கு போதுமானது என கூறி , எண்ணெய் விளக்கில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர், இன்றைய பெற்றோர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மட்டுமே நம்பக்கூடாது என தெரிவித்தார். 


No comments