Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். டெங்கு பரவும் சூழல் - 07 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம்


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 07 குடியிருப்பாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் , டெங்கு ஒழிப்பு பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 7 பேரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

No comments